எல்.ஐ.சி.யின் புதிய "தன் சஞ்சய்" ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்.!

0 3867

பாலிசி தாரர்களின் குடும்பங்களுக்கு 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும் வகையில் ”தன் சஞ்சய்” என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் இந்த காப்பீடு திட்டத்தில், 3 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பாலிசி பிரீமியத்தை மொத்தமாகவோ, அல்லது தவணை முறையிலோ செலுத்தலாம் என எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலிசிதாரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து 30,000 ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments